ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் ராம் சரண், சமந்தா, ஆதி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழா நேற்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது.
விழாவில் ராம்சரண் அவரது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் படத்தின் முக்கியமான திருப்புமுனையைச் சொல்லி படக்குழுவினரை சிரஞ்சீவி அதிர்ச்சியடைய வைத்துவிட்டார்.
ஒரு திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசுவதென்றால், அந்தப்படம் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டோ அல்லது படத்தைப் பார்த்து விட்டோ வருவது தான் சிரஞ்சீவியின் வழக்கம். அப்படித்தான் தன், மகன் ராம் சரண் நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படத்தையும் அவர் பார்த்துவிட்டார்.
நேற்று நிகழ்ச்சியில் பேசும் போது, படத்தில் ஆதி இறக்கும் காட்சியில் ராம் சரணின் நடிப்பு அவ்வளவு அற்புதமாக இருந்தது என படத்தின் முக்கியமான காட்சி பற்றி வாய் தவறி பேசிவிட்டார். சிரஞ்சீவியின் இந்த பேச்சு படக்குழுவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இருந்தாலும், படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் அந்த பேச்சு படத்தை பாதிக்க வாய்ப்பில்லை.