ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் வெளியான 'மாயநதி' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களிலேயே அதிக வரவேற்பை பெற்றது.. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்க, வளர்ந்துவரும் இளம் நாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்திருந்தார்.
காதல் கதைகளிலேயே இது புதுமாதிரியான திரைக்கதை பாணியில் சொல்லப்பட்டிருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. திரையுலகினர பலரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இந்தப்படம் வெளியாகி 75வது நாளை தொட்டுள்ள நிலையில் நடிகர் மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் இந்தப்படத்திற்கு பாராட்டு பத்திரம் எழுதியுள்ளார்.
“சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன். மனம் திறந்து சொல்ல வேண்டுமென்றால் உண்மைக்கு பக்கத்தில் இருந்து அழகாக நெய்யப்பட காதல் கதை தான் இந்த 'மாயநதி'. 75வது நாளை கொண்டாடும் படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.