ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் பிளஸ்சி. நம்ம ஊர் பாலா மாதிரி என வைத்துக் கொள்ளுங்கள். இவர் தற்போது பிருத்விராஜை வைத்து 'ஆடுஜீவிதம்' என்கிற படத்தை இயக்கவுள்ளார். அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒரு இளைஞனின் பரிதாப வாழக்கையும் அங்கிருந்து தப்பிக்க துடிக்கும் அவனது போராட்டமும் தான் படத்தின் கதை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தின் கதாநாயகியாக, பிருத்விராஜின் மனைவியாக அமலாபால் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அமலாபாலை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்ய காரணம் என்ன ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் பிளஸ்சி..
“அமலாபால் தான் எனது 'சைனு' கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார். அவரால் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக மலையாளத்தில் 'மிலி' படம் தவிர மற்ற படங்களில் எல்லாம் அவரது திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். மேலும் அவரது திறமைக்கு தீனிபோடும் கேரக்டர்களையும் யாரும் கொடுக்கவில்லை” என வருத்தப்பட்டுள்ளார் இயக்குனர் பிளஸ்சி.