ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது என்றால் மலையாள சினிமா படைப்பாளிகளின் சாய்ஸாக இருப்பது நடிகர் ஜெயசூர்யா தான், வாய்பேசாத, காதுகேளாத, திக்குவாய் குறையுடைய, ஒரு கால் ஊனமாக என இப்படி பல கேரக்டர்களில் கதைக்காக தன்னை மாற்றிக்கொண்டு நடித்தவர்தான் ஜெயசூர்யா.
அந்தவகையில் தற்போது தந்து ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் போஸ்டர் வடிவமைப்பில் சானிடரி நாப்கின் மீது டைட்டில் இடம்பெற்று இருப்பதால் இது சமீபத்தில் வெளியான அக்சய்குமார் நடித்த 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள இயக்குனர் ரஞ்சித் சங்கர், இது முற்றிலும் வேறான கதை என்றும், இதில் புதிய ஜெயசூர்யாவை பார்ப்பீர்கள் என்றும் கூறியுள்ளார்.