ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவின் சீனியர் நடிகையான கே.பி.ஏ.சி லலிதா, திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி 5௦ ஆண்டுகள் ஆனதையொட்டி. திரையுலகை சேர்ந்தவர்கள் திருச்சூரில் இதை ஒரு விழாவாக எடுத்து கொண்டாடியுள்ளார்கள்..
இந்த விழாவில் மம்முட்டி, ஜெயராம், மேனகா சுரேஷ், இன்னொசன்ட் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். மோகன்லால் 'காயங்குளம் கொச்சுன்னி' படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்றதால் இந்த நிகழ்வில் கலந்துகொள வில்லை.
'காதலுக்கு மரியாதை' படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் தான் கே.பி.ஏ.சி லலிதா. அதுமட்டுமல்ல தமிழில் நடிகர், திலகம் சிவாஜி, கமல் நடித்த 'தேவர்மகன்' மற்றும் ஆவாரம்பூ படங்களை இயக்கிய மறைந்த மலையாள இயக்குனர் பரதனின் மனைவியுமாவார்.
இவரது மகன் சித்தார்த் பரதன் தற்போது மலையாள திரையுலகில் தந்தை வழியில் இயக்குனராக மாறி படங்களை இயக்கி வருகிறார்..