ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் பாகமதி. வழக்கமான ஹாரர் படம் என்கிற விமர்சனங்கள் வெளியானபோதும், வசூல்ரீதியாக இந்த படம் பெரிய சாதனை செய்திருக்கிறது. அதன்காரணமாக அனுஷ்காவின் ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்து மேலும் உயர்ந்து நிற்கிறது. அதனால், தொடர்ந்து கதையின் நாயகியாக நடிப்பதில் ஆர்வத்தை தீவிரப்படுத்தியுள்ளார் அனுஷ்கா.
இந்த நிலையில், அடுத்தபடியாக ஒரு படத்தில் நடிக்க அனுஷ்கா சைன் பண்ணி விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் அனுஷ்கா அந்த செய்தியை மறுத்துள்ளார். அதேசமயம், பாகமதி ரிலீசுக்குப்பிறகு நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். இன்னும் கேட்கப்போகிறேன். அதன்பிறகு கேட்டதில் எனக்கு பிடித்த கதைகளை ஓகே செய்து நடிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அடுத்தபடியாக சரித்திர கதையாக இல்லாமல் சமூக நோக்கமுள்ள ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் அனுஷ்கா.