ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இந்தியாவில் பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரத்தா கபூர். தற்போது பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் என்ட்ரியாகியிருக்கிறார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராவதால், சில க்ளோசப் காட்சிகளில் அந்தந்த மொழிகளில் டயலாக் பேசி நடிக்கிறார். மேலும், இதுவரை ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் பிரபாசுடன் நடித்து வந்த ஸ்ரத்தா கபூர், பிப்ரவரி மாதம் துபாய் சென்று சாஹோ படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஸ்ரத்தா கபூர் கமிட்டாகி விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை தற்போது ஸ்ரத்தா கபூர் மறுத்துள்ளார். அதோடு, தெலுங்கில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. என்றாலும், தற்போது சாஹோ படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் மற்ற படங்களிலும் கமிட்டானால் கால்சீட் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் சாஹோ படப்பிடிப்பு முடிந்த பிறகே புதிய தெலுங்கு படங்களில் கமிட்டாகும் முடிவில் இருக்கிறேன்.
அதனால் ஜூனியர் என்டிஆர் மட்டுமின்றி வேறு ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்கவும் என்னிடம் பேசியிருக்கிறார்கள். அந்த படநிறுவனங் களிடம் சாஹோ முடிந்த பிறகு சொல்கிறேன் என்று கூறியிருக்கிறேன் என்கிறார் ஸ்ரத்தா கபூர்.