பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த 25வது படமான அஞ்ஞாதவாசி பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. ஆனால் அந்த படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்த அந்த படம் பவனின் ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றி விட்டது. இதனால் அடுத்தபடியாக அவர் உடனடியாக புதிய படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அஞ்ஞாதவாசி படத்தில் நடித்து வந்தபோதே வரப்போகிற சட்டசபை தேர்தலில் ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிடுவேன் என்று கூறி வந்தவர், இப்போது அதை உறுதிப்படுத்தி விட்டார். அதன்காரணமாக மூன்றுநாள் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பவன்கல்யாணை, அவரது மனைவி அன்னா, நேற்று காலை ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்து வழியனுப்பி வைத்துள்ளார்.