ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கேரளாவில் போலீஸாரால் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்த தனது தம்பியின் மரணத்திற்கு நீதிகேட்டு தலைமைச்செயலகம் முன்பாக ஸ்ரீஜித் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.. ஆனால் இரண்டு வருடங்களாக பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இவரது போராட்டம் சமீபகாலமாக சோஷியல் மீடியா மூலம் கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக மலையாள நட்சத்திரங்களான பிருத்விராஜ், நிவின்பாலி, பார்வதி, இந்திரஜித், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் ஸ்ரீஜித்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் 'தோழா', பெங்களூர் நாட்கள்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர், ஸ்ரீஜித்துக்கு ஆதரவாக 'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீஜித்' என்கிற ஆந்தம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப்பாடல் மூலம் கிடைக்கும் தொகையை ஸ்ரீஜித்துக்கு வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளார் கோபிசுந்தர்.