ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழர் திருநாளான பொங்கல் தினம், ஆந்திரா, தெலுங்கானாவிலும் 'சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் போலவே, ஆந்திரா, தெலுங்கானாவிலும் பொங்கல் போட்டிகளில் கடும் போட்டி உள்ளது. தெலுங்குத் திரையுலகின் அதிரடி ஆக்ஷன் ஹீரோக்களான பவன் கல்யாண், பாலகிருஷ்ணா இருவருக்கும் இடையேதான் இந்த பொங்கலில் கடும் போட்டி. கூடவே, தமிழ் ஹீரோவான சூர்யாவும் சேர்ந்து கொண்டுள்ளார்.
பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் நடித்த 'அஞ்ஞாதவாசி' படம் பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக 10ம் தேதியே வெளியாகிவிட்டது. படத்திற்குப் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்துள்ள 'ஜெய் சிம்ஹா' படம் இன்று வெளியாகிறது. படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக அமைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும் என்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படம் தெலுங்கில் 'கேங்' என்ற பெயரில் டப்பிங் ஆகி இன்று வெளியாகியுள்ளது. ஒரு நேரடிப் படத்தைப் போல இப்படத்தை தெலுங்கில் விளம்பரம் செய்துள்ளார்கள். பவன்கல்யாண், பாலகிருஷ்ணா ஆகியோரின் நேரடிப் படங்களுக்கு இணையாக சூர்யா நடித்துள்ள 'கேங்' படமும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.