ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, டாக்டர் ராஜ சேகர் ஆகிய இருவரும் சினிமாவில் நடித்து வந்தபோது போட்டியாளர்களாக இருந்தனர். அதன்பிறகு சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி போட்டியிட்டபோது அவருக்கு எதிராக டாக்டர் ராஜசேகரும் போட்டியிட்டார். இதனால் அவர்கள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தனர்.
ஆனபோதும், தனது கருட வேகா படம் வெளியாவதற்கு முன்பு சிரஞ்சீவிக்கு படத்தை போட்டுக் காண்பித்தார் ராஜசேகர். அந்த படத்தை பார்த்த சிரஞ்சீவியும் படம் குறித்து பாசிட்டீவான கருத்துக்களை வெளியிட்டார். இது அந்த படத்தின் வெற்றிக்கு துணை புரிந்தது.
இந்த நிலையில், கடந்த புத்தாண்டு தினத்தின்போது ஐதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் அரசியல்வாதி சுப்ரமணிய ரெட்டி தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். இந்த விருந்தில் சிரஞ்சீவி மட்டுமல்லாது டாக்டர் ராஜசேகர், மோகன்பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். இதன்மூலம் சிரஞ்சீவீ - ராஜசேகர் இடையேயான பகை மறைந்து மீண்டும் நண்பர்களாகி உள்ளனர்.