ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் கன்னட நடிகர் கே.எஸ்.அஸ்வத். 300 படங்களுக்கு மேல் நடித்தவர். இவரது மகன் ஷங்கர் அஸ்வத். இவரும் 25 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமாகி 60 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். போதிய சினிமா வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். அந்த வாய்ப்புகளும் குறைந்ததால் தற்போது மைசூரில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக தலையில் தொப்பியுடன் பணியாற்றி வந்த இவரை அடையாளம் கண்டு கொண்ட நிருபர் ஒருவர் அவரை படம் எடுத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தான் கார் டிரைவராக பணியாற்றுவது குறித்து ஷங்கர் அஸ்வத் கூறியிருப்பதாவது: எனக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை தான். அதற்காக நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு பிச்சை எடுக்க முடியாது. எனக்கு சுயமரியாதை முக்கியம். அதனால் எனக்கு பிடித்த தொழிலை சந்தோஷமாக செய்கிறேன். நல்ல வருமானமும் கிடைக்கிறது. வாழ்க்கையும் சந்தோஷமாக செல்கிறது. சில சீரியல் வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் இருக்க விரும்புகிறேன். இந்த வேலை அதை தருகிறது. அது போதும். சினிமாவிலோ, சீரியலிலோ நடிக்கும் எண்ணம் இல்லை. என்கிறார் ஷங்கர் அஸ்வத்.