மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கடந்த வருடம் பஹத் பாசிலுக்கு உற்சாகாமான ஆண்டாக அமைந்தது போலவே இந்த வருடமும் அவருக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது என்றே சொல்லலாம். வசூலை அள்ளிய சூப்பர்ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் 5௦ நாட்கள் ஓடிய இரண்டு படங்களை கொடுத்துள்ளார் என்பதே மகிழ்ச்சியான விஷயம் தான்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியான 'டேக் ஆப்' படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும் ஈராக் நாட்டின் இந்திய தூதராக அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் அனைவரின் பாராட்டையும் தட்டிச்சென்றது.
அதேப்போல 'மகேஷிண்டே பிரதிகாரம்' இயக்குனர் திலீஷ் போத்தன் டைரக்சனில் மீண்டும் நடித்த 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' படமும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் அவர் நடித்த இன்னொரு படமான ரோல்மாடல்ஸ்' வந்த சுவடே தெரியாமல் பெட்டிக்குள் முடங்கியது.
இந்த வருடம் 'வேலைக்காரன்' படம் மூலம் தமிழிலும் அறிமுகமாகியுள்ளார் பஹத் பாசில். அரவிந்தசாமிக்கு 'தனி ஒருவன்' சித்தார்த் அபிமன்யூ கேரக்டர் கைகொடுத்தது போல பஹத் பாசிலுக்கு இந்தப்படம் கைகொடுக்கவில்லை என்பது வருத்தம் தான். ஆனாலும் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவரும் படம் தமிழில் பஹத் பாசிலுக்கு நிலையான ஒரு இடத்தை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கலாம்.
சினிமாவை தாண்டி, இந்த வருடம் பாண்டிச்சேரியில் சொகுசு கார் பதிவுசெய்து, வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியதும் அதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டதும் தான் பஹத் பாசிலின் பயணத்தில் திருஷ்டி பொட்டாக அமைந்துவிட்டது.