ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் நிவின்பாலி நடித்துள்ள நேரடி தமிழ்ப்படமான ரிச்சி நேற்று வெளியானது. படத்தை பார்த்த சாதாரண தமிழ் ரசிகர்கள் பலரும் தாங்கள் புரிந்துகொள்ளும் லெவலில் இந்தப்படம் இல்லை என கூறிவருகின்றனர். அதேசமயம் கேரளாவில் படத்தை பார்த்த நிவின்பாலி ரசிகர்களும் கூட இதே ரீதியில் தான் கருத்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் மலையாள நடிகரும், இயக்குனருமான ரூபேஷ் பீதாம்பரன் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் 'ரிச்சி'யின் ஒரிஜினலான 'உள்ளிடவரு கண்டந்தே' படத்தை பற்றியும் அதில் ஹீரோவாக நடித்திருந்த ரக்சித் ஷெட்டி எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார் என்பதையும் புகழ்ந்து தள்ளியிருந்தார். அதேசமயம் ரிச்சியை பற்றி எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும் கூட, இதுவே 'ரிச்சி' படம் சரியாக இல்லை என மறைமுகமாக விமர்சிப்பது போலத்தானே.
இதனால் கோபமான நிவின்பாலி ரசிகர்கள், ரூபேஷ் பீதாம்பரனை சோஷியல் மீடியாவில் காய்ச்சி எடுத்துவிட்டனர். ஒருகட்டத்தில் ரூபேஷ், “நிவின்பாலி உங்கள் ரசிகர்களுக்கு சொல்லுங்கள், நான் ரிச்சி படத்தை குறைசொல்ல வில்லை என்று” என அதே பேஸ்புக் பக்கத்தில் கோரிக்கையும் கூட வைத்தார்.. ஆனாலும் கண்டனங்கள் தொடரவே, “நான் நிவின்பாலியையோ, ரிச்சியையோ குறைகூறவில்லை, நான் சொன்னது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்” என மன்றாடி கேட்டுள்ளார் ரூபேஷ் பீதாம்பரன்.
இவர் துல்கர் நடித்த 'தீவ்ரம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.