ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் வருவதைத் தொடர்ந்து தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார். நேற்று சாலோ ரே சாலோ ரே சால் -என்ற பெயரில் தனது பிரச்சார யாத்திரையை அவர் தொடங்கினார்.
அப்போது ஆந்திராவில் தற்கொலை செய்து கொண்ட வெங்கடேஷ் என்ற இளைஞரின் பெற்றோரை அழைத்து பேசினர் பவன் கல்யாண். அதோடு அந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார்.
மக்கள் விரோத செயல்களை ஜனசேனா பார்ட்டி பொறுத்துக் கொள்ளாது. மக்களை சூழ்ந்து கொண்டுள்ள பிரச்னைகளை விடுவிடுக்க, நல்லது செய்ய, சேவை செய்ய அரசியலில் இறங்கியிருக்கிறேன். மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடித்து வருகிறேன். விபத்துக்கள், குற்றங்கள், காட்டுமிராண்டி தனங்களை கடுமையாக எதிர்க்கிறேன் என்று பேசினார்.
பவன்கல்யாணின் இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பவன் கல்யாணின் இந்த அரசியல் யாத்திரை பயணம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.