ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒருநாள்கூத்து, பொதுவாக என்மனசு தங்கம் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், வெங்கட்பிரபு இயக்கும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்னும் தமிழில் ஒரு நிலையான இடத்தை அவர் பிடிக்கவில்லை.
இருப்பினும் தற்போது தெலுங்கில், ஸ்ரீவிஷ்ணு நாயகனாக நடிக்கும் மென்டல் மதிலோ என்ற படத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இப்படம் நாளை(நவ., 24) ரிலீஸாகிறது.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் ஸ்வெட்சா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரொம்ப சுந்திரமான பெண்ணின் வேடம். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஸ்ரீ விஷ்ணுவுடன் அறிமுகம் இல்லாததால் சில தினங்கள் அமைதியாக இருந்தேன். அதன்பிறகு அவரிடம் சகஜமாக பேசிப்பழகத் தொடங்கிவிட்டேன்.
நான் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்த பெண்ணாக இருந்தபோதும் எனக்கு தெலுங்கு ஓரளவு பேசத் தெரியும். எப்படியென்றால், எனது அப்பா தமிழர் என்றபோதும் அம்மா ஆந்திராவைச் சேர்ந்தவர். அதனால் தெலுங்குப்பட யூனிட்டில் தெலுங்கிலேயே பேசி வருகிறேன். எதிர்காலத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து நடிக்கப்போவதாக சொல்கிறார்.