பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி வீட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் நடையாய் நடந்த அவரது தம்பி ராமகிருஷ்ணன், தற்போது ஒய்ந்துபோய்விட்டார். இந்தநிலையில் இந்த விவகாரத்தால் பிரபலமான கலாபவன் மணியின் தம்பியை தேடி சினிமா வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. அவிரா வர்கீஸ் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு 'தாமரக்குன்னிலே பத்ரபூரணம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா பகுதிகளில் நடைபெற்று வருகிறது.