ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இந்திய சினிமாவை பிரமிக்க வைத்த பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலியின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வெங்கடேச பிரசாத் (தாயாக ரோகினி நடித்தார்). இவர் தெலுங்கில் பெரிய நடிகர் இல்லை. சின்ன சின்ன கேரக்டர்களில் தான் நடித்து வந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய நடிகர் ஆனார். தற்போது, பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வெங்கட பிரசாத் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாராம். சினிமா வாய்ப்பு தேடி வந்த அந்த பெண்ணை ஆசை காட்டி மயக்கி திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். 2 முறை அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வெங்கட் பிரசாத் மீது புகார் அளித்துள்ளார்.
அதோடு போதை மருந்து கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வெங்கட பிரசாத்தை கைது செய்த போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெங்கட பிரசாத் கைது செய்யப்பட்டிருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.