ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது 30 வயதை கடந்து விட்ட காஜல் அகர்வால், தமிழில் விவேகம், மெர்சல் படங்களில் நடித்தது போன்று தெலுங்கில் கைதி எண் 150, நேனே ராஜூ நேனே மந்திரி படங்களிலும் நடித்தார். இந்த படங்கள் எல்லாமே வெற்றியாக அமைந்தது. இந்த நிலையில், சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பதற்கு அவர் அதிகப்படியான சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, தெலுங்கில் காஜல் அகர்வாலை லஷ்மி கல்யாணம் படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் தேஜா. அதையடுத்து ராணாவை வைத்து அவர் இயக்கிய நேனே ராஜூ நேனே மந்திரி படத்திலும் காஜலை நடிக்க வைத்தார். இந்த நிலையில், அடுத்தபடியாக வெங்க டேஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார் தேஜா.
இந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை அணுகியபோது, தனது வழக்கமான சம்பளத்தில் இருந்து கூடுதலாக கேட்டாராம். அதோடு, சிரஞ்சீவியுடன் கைதி எண் 150 படத்தில் நடித்தபோது கூடுதலான சம்பளம் கொடுத்தார்கள். அதேபோல் சீனியர் நடிகரான வெங்கடேஷ் படத்தில் நடிப்பதற்கும் அதேபோன்று சம்பளம் தந்தால் தான் நடிப்பேன் என்று டிமான்ட் செய்து வருகிறாராம். தன்னை தெலுங்கு சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனரிடமே காஜல் அகர்வால் இப்படி பிடிவாதம் செய்து வருவது தெலுங்கு சினிமாவில் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.