ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் கெளதமி. புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் அதை எதிர்த்து போராடி பூரண குணமடைந்துள்ளார். அதோடு, புற்று நோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்தநிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கெளதமி மற்றும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பாலகிருஷ்ணா, கெளதமி புற்று நோயில் இருந்து உயிர் தப்பியவர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களது வாழ்க்கையில் அடித்தளமாக இருந்து வருகிறார். அந்த வகையில், புற்று நோயை எதிர்த்து போராடிய கெளதமி ஒரு உண்மையான போராளி என்று கூறியுள்ளார்.