ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நடிகை நித்யா மேனனிடம் மேக்அப் உமனாக பணியாற்றி வருகிறவர் ஜூலி. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் வெளிவந்த விஜய் படத்தில் நித்யா மேனனுக்கு மேக்அப்வுமனாக பணியாற்றி உள்ளார். ஜூலி எர்ணாகுளம் போலீஸ் ஐஜியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் பிராணா என்ற படத்தில் நித்யாமேனனுக்கு மேக்அப் உமனாக பணியாற்றி வருகிறேன். இதன் படப்பிடிப்பு கொச்சியில் நடந்தபோது அங்குள்ள சலீம் பங்களாவில் தங்கியிருந்தேன். படப்பிடிப்பு முடிந்து என் அறைக்கு திரும்பியபோது அங்கிருந்த விலை உயர்ந்த மேக்அப் சாதனங்கள் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து பங்களா உரிமையாளரிடம் கேட்டேன். அவர் சரியாக பதில் சொல்லவில்லை. நான் என் அறைக்கு திரும்பி விட்டேன். அதன்பிறகு படத்தின் தயாரிப்பு நிர்வாகி பாதுஷா உள்பட சிலர் என் அறைக்குள் வந்து என்னை தகாத வார்த்தைகள் பேசி பலாத்காரம் செய்ய முயன்றனர். நான் கூச்சல் போட்டதால் ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசி புகார் செய்யக்கூடாது என்று மிரட்டினார்கள். என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி எர்ணாகுளத்தில் விட்டுச் சென்றனர். இவ்வாறு அவர் தன் புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிராணா படத்தின் இயக்குன் வி.கே.பிரகாஷ் கூறும்போது, "ஜூலியை யாரும் பலாத்காரம் செய்ய முயற்சிக்கவில்லை. அவர் குடிபோதையில் ரகளை செய்ததால் காரில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தோம்" என்றார்.