ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் நடிகர் பசுபதிக்கென தானது படங்களில் முக்கியமான ஒரு கேரக்டரை ஒதுக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்.. பெரும்பாலும் தமிழ்-மலையாளம் இணைந்த படங்களையும் உருவாக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டும் இவர், பசுபதியை வைத்து இதற்கு முன் நம்பர் 66 மதுரா பஸ் மற்றும் வைரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் 'கிணர்' (கிணறு) என்கிற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படங்களைப்போல இந்தப்படத்திலும் பசுபதியை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் எம்.ஏ.நிஷாத்..
அதுமட்டுமல்ல, ஜெயப்ரதா, அர்ச்சனா, ரேவதி என மூன்று சீனியர் நடிகைகள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு இருமொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப்படம் தமிழில் 'கேணி' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. 1991ல் தளபதி படத்தில் இளையராஜா இசையில் சூப்பர்ஹிட்டான 'காட்டுக்குயிலு' பாடலை தொடர்ந்து 26 வருடங்கள் கழித்து யேசுதாசையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் ஒன்றாக இணைத்து இதில் ஒரு பாடலை பாடவைத்துள்ளார் எம்.ஏ.நிஷாத்.