ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக நடித்து வரும் பிருத்விராஜ் அடுத்ததாக இரண்டு புராணப்படங்களில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அந்த இரண்டு படங்களில் ஒன்றுதான் முதன்முறையாக கடவுள் கிருஷ்ணரை ஹீரோவாக்கி 'பழசிராஜா' புகழ் ஹரிஹரன் டைரக்சனில் 'ஸ்யாமாந்தகம் என்கிற படமாக உருவாக இருக்கிறது. இதுபற்றி இன்னும் முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதேசமயம் இன்னொரு புராணப்படமான 'கர்ணன்' படத்திற்கான முறையான அறிவிப்பு கடந்த 2016 ஜனவரியில் பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டது..
பிருத்விராஜுக்கு கடந்த 2015ல் 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஆர்.எஸ்.விமல் தனது இரண்டாவது படமாக இந்தப்படத்தை இயக்குவதாக அறிவித்தார்.. படத்தின் பட்ஜெட்டும் கிட்டத்தட்ட 45 கோடி என்று சொல்லப்பட்டது. இந்தநிலையில் 'கர்ணன்' படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம் படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளது என்றும், இந்தப்படத்தின் பிரமாண்டத்தை உணராமல் முன்யோசனை இல்லாமல் படத்தில் இறங்கியதாகவும் இந்தப்படத் தயாரிப்பாளர் சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, மம்முட்டி நடிக்கவிருக்கும் 'மாமாங்கம்' என்கிற வரலாற்றுப்படத்தை தயாரிக்க இருப்பதும் இதே தயாரிப்பாளர் தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.