மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நாகார்ஜுனா மகன் நாகசைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டு நாகார்ஜுனாவின் மருமகள் ஆனார் நடிகை சமந்தா. மருமகள் சமந்தாவும், மாமனார் நாகார்ஜுனாவும் நடித்துள்ள 'ராஜு காரி கதி 2' படம் இன்று தெலுங்கில் வெளியாகிறது. இப்படத்தில் சமந்தா பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்வு ஒன்றில் பேசிய நாகார்ஜுனா, தான் சமந்தாவின் ரசிகன் என்று சொல்லி சமந்தாவை வெட்கப்பட வைத்துள்ளார்.
“சமந்தா முதலில் நடித்த 'ஏ மாய சேசவே' படத்தைப் பார்த்ததில் இருந்தே நான் சமந்தாவின் ரசிகன் ஆகிவிட்டேன். அந்தப் படத்தைப் பார்த்ததும் அவருக்கு போன் செய்து அவருடைய ரசிகன் ஆகிவிட்டேன் எனத் தெரிவித்தேன். இந்த 'ராஜு காரி கதி2' படத்தில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவருடைய நடிப்பு மிகவும் அர்த்தமானதாக இருக்கும். படத்தில் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் சமந்தாவின் நடிப்பு மிகச் சிறந்த நடிப்பு என்று சொல்ல மாட்டேன். அவர் இதை விட இன்னும் சிறப்பான படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். ஆனால், சமந்தா இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே இந்தப் படத்தில் நடித்த அம்ருதா கதாபாத்திரம்தான் மிகச் சிறந்தது,” என நாகார்ஜுனா பாராட்டினார்.