ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கொஞ்சம் கூட அடிதடி வன்முறை இல்லாமல் முழுக்க முழுக்க அரசியலை வைத்து, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான படத்தை தரமுடியும் என நிரூபித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மலையாளத்தில் 'ராம்லீலா' படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் அருண்கோபி.. இல்லையென்றால் தோமிச்சன் முலக்குப்பாடம் போன்ற, பழம் தின்று கோட்டை போட்ட தயாரிப்பாளர், ஒரு அறிமுக இயக்குனருக்கு படம் தருவது என்றால் சாதாரண விஷயமா..? இல்லை, அந்தப்படத்தை திலீப் ஒப்புக்கொண்டு நடித்தது தான் சாதாரண விஷயமா..?
இந்த இரண்டுபேரின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக முதல் படத்தையே வெற்றிப்படமாக்கிய அருண்கோபிக்கு அடுத்ததாக மோகன்லால் படத்தை இயக்கும் பம்பர் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. ராம்லீலா படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன்லாலை சந்தித்து வாழ்த்து பெற்று வந்துள்ளார் அருண்கோபி. கூடவே தயாரிப்பாளர் தோமிச்சனும் உடன் சென்றுவந்துள்ளார். இவர்தானே மோகன்லாலை வைத்து 'புலி முருகன்;' படத்தை தயாரித்தவர். அதனால் தங்களது அடுத்த படத்திற்கு அச்சாரம் போடுவதற்காகத்தான் மோகன்லாலை இவர்கள் சந்தித்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.