ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் தொடங்கியது. ஆனால் செப்டம்பர் 24-ந் தேதியான நாளையோடு இந்த சீசன் முடிவடைகிறதாம். இறுதிப்போட்டியில் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, அர்ச்சனா, ஹரி தேஜா, நவ்தீப் மற்றும் சிவா பாலாஜி ஆகிய ஐந்து பேரும் களத்தில் உள்ளனர். இந்த ஐவரில் ஒருவர் தான் வெற்றி பெற போகிறார். யார் அந்த வெற்றியாளர் என்பது நாளை(செப்., 24) தெரிந்து விடும்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாள் அன்று ஒரு லைவ் டான்ஸ் ஆடியபடியே நிகழ்ச்சியை தொடங்கிய ஜூனியர் என்டிஆர், ஜெய் லவகுசா படத்தில் நடித்தபடியே பிக்பாஸ் நிகழ்ச்சியை ரொம்ப கலகலப்பாக நடத்தி வந்தார்.
மேலும், மா டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நடத்தி வந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த சீசனின் இறுதி நாள் என்பதால், மாலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நடத்துகிறார்கள். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் அனைவரையும் பேட்டி காண்பதோடு, வெற்றிபெற்றவர்களையும் அறிவிக்கிறாராம் ஜூனியர் என்டிஆர்.