ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மாதிரி சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் சாசனம் எழுதிக் கொடுத்தது போல போலீஸ் அதிகாரி கேரக்டர்களை குத்தகைக்கு எடுத்திருந்தவர் சுரேஷ்கோபி மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் நான்கு வருடத்திற்கு ஒருமுறை போலீஸ் கேரக்டரில் நடித்தால் இவர் வருடத்திற்கு நான்கு போலீஸ் படங்களில் நடித்தார்.
சினிமாவில் சுரேஷ்கோபி நுழைவதற்கு முன் அவரை போலீஸ் அதிகாரியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது தான் அவரது தந்தையின் விருப்பமாக இருந்தது. அதற்கான தேர்வுகளையும் சுரேஷ்கோபி எழுதினார். தந்தை சினிமா டிஸ்ட்ரிபியூட்டர் என்பதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் வேலையையும் அவர் எளிதாக வாங்கி தந்திருப்பார்.
ஆனால் சுரேஷ்கோபியின் நாட்டமெல்லாம் சினிமாவில் இருந்ததால், அவரது தந்தை, மகன் பற்றிய தனது ஆசையை மனதிற்குள் புதைத்துக்கொண்டார். ஆனாலும் அந்த போலீஸ் யூனிபார்ம் சுரேஷ் கோபியை விட்டபாடில்லை. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் குறையாத படங்களில் போலீஸ் அதிகாரியாக, மகன் நடித்ததை பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார் அவரது தந்தை.