ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் கம்பீரம், குருதேவா, காற்றுள்ளவரை, வணக்கம் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மலையாள நடிகை பிரணதி. மலையாளத்தில் பார் தி பீப்பிள், 4 ஸ்டூடன்ட் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத பிரணதி சென்னையில் வசித்து வருகிறார்.
கேரள மாநிலம் தலச்சேரி அவரது சொந்த ஊர். அந்த ஊரில் இருக்கும் பிரணதியின் தாத்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பார்க்க அங்கு சென்றிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரணதியின் தாய் மாமன் அரவிந்த் பிரணதியின் வீட்டுக்கு சென்று அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி விட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து பிரணதி தலசேரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் தாய்மாமன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரணநிதிக்கும், அவரது தாய்மாமன் அரவிந்துக்கும் இடையில் தலசேரியில் உள்ள பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதையொட்டியே அரவிந்த் பிரணதியை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"கொஞ்ச நாட்களாகவே அரவிந்த் என்னை மிரட்டி வருகிறார். நான் இங்கு வந்ததும் துப்பாக்கி எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் எனது நெருங்கிய உறவினர்தான் என்றாலும் வேறு வழியில்லாமல்தான் போலீசில் புகார் கூறினேன்" என்கிறார் பிரணதி.