ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் நடிகை கடத்தல் விவகாரத்தில் முதல் குற்றவாளியாக போலீசிடம் சிக்கிய பல்சர் சுனில், தினசரி ஏதோ ஒரு விவகாரமான செய்தியை கொளுத்திப்போட்டு வருகிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனை மேடம் என குறிப்பிட்டு போலீசாரின் பார்வையை அவர் பக்கமும் திருப்பினார். இந்தநிலையில் திலீப்பின் வலதுகரம் என சொல்லக்கூடிய அளவுக்கு அவரது நண்பராக விளங்கும் இயக்குனர் நாதிர்ஷா மீது புதிதாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் பல்சர் சுனில்.
நடிகை கடத்தல் விவகாரத்தில் திலீப்பின் பெயர் அடிபட ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை, அவருக்கு சப்போர்ட் ஆக இருந்து வருபவர் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா தான். அதனால் தான் போலீஸாரின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியது. இதனால் தானும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த நாதிர்ஷா தனது முன் ஜாமீனுக்காகவும் விண்ணப்பித்துள்ளார். இந்தநிலையில் தனக்கு 25 ஆயிரம் ரூபாயை நாதிர்ஷா மூலமாக திலீப் தந்ததாக தற்போது கூறியுள்ளார் பல்சர் சுனில்.
இந்த தொகையை நாதிர்ஷா இயக்கிவந்த 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தின் ஷூட்டிங் தொடுபுழாவில் நடைபெற்று வந்தபோது அந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் நாதிர்ஷாவிடம் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள தகவலை உறுதி செய்யும் விதமாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குறிப்பிட்ட தேதியில் தொடுபுழாவில் இருந்ததை அவரது மொபைல் டவர் காட்டியதாம். அந்த டவர் காட்டிய பகுதியில் அதே தேதியில் நாதிர்ஷா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனராம்.