ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பைரவா படத்திற்கு பிறகு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தமிழை விட தெலுங்கில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நானியுடன் அவர் நடித்த நேனு லோக்கல் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததால், தெலுங்கில் பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி கதையில் உருவாகும் மகாநதி படத்தில் லீடு ரோலில் நடித்து முடித்து விட்டார்.
அதையடுத்து, தற்போது திரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் பெயரிடப்படாத அவரது 25-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்து பாங்காங்கில் நடைபெறுகிறது. அங்கு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இந்த பாடலை ஏற்கனவே இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சில தினங்களிலேயே அந்த பாடலை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளார்களாம்.
மேலும், இதே படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் சில பாடல்களுக்காக வேறு சில வெளிநாடுகளுக்கும் பவன்கல்யாண் டீமுடன் செல்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதோடு, இந்த படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.