ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த மே மாதம் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி அழகான பெண் குழந்தைக்கு தந்தையானார். இந்தநிலையில் தனது மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை மிகச்சிறப்பாக நேற்று கொண்டாடியுள்ளார் நிவின்பாலி. குழந்தைக்கு ரோஸ் தெரசா என பெயரிட்டுள்ளார். அன்னை தெரசாவின் ஞாபகார்த்தமாக இந்த பெயரை அவர் வைத்துள்ளதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்... இந்த பெயர் சூட்டும் விழாவில் நடிகர்கள் குஞ்சாக்கோ போபனும் சுராஜ் வெஞ்சாரமூடுவும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
நிவின்பாலியும் அவரது மனைவி ரீனாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அந்த அன்பின் அடையாளமாக ஏற்கனவே நான்கு வயதில் தாவீத் என்கிற மகன் இருக்கிறான். இப்போது இந்த பெண் குழந்தையின் வரவு நிவின்பாலியின் குடும்பத்தை ரொம்பவே உற்சாகப்படுத்தி இருக்கிறது. தனது குழந்தை பிறந்த சில தினங்களிலேயே இனி அது எங்கு அழைத்துச்செல்லப்பட்டாலும் அதன் வசதிக்காகவே ஒரு மினி கூப்பர் காரையே நிவின்பாலி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.