மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
நடிகர் ராணா தெலுங்கு சினிமாவில் என்ட்ரியான காலகட்டத்தில் சில ஹிட் படஙக்ளைக் கொடுத்திருக்கிறார் என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளாக அவரது படங்கள் வசூல்ரீதியாக பாக்ஸ் ஆபீசில் பின்தங்கியே இருந்து வந்துள்ளன. ஆனால், ராஜமவுலி இயக்கத்தில் பிரபாசுடன் இணைந்து அவர் நடித்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியாக அமைந்தன. என்றாலும், அந்த படத்தில் ராணா வில்லன் என்பதால் அது அவரது சாதனை பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், ஆகஸ்ட் 11-ந் தேதி அவர் நடித்து வெளியான நேனே ராஜூ நேனே மந்திரி படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் கடந்த 10 நாட்களில் ரூ.30 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இது ராணாவின் கடந்த பத்து ஆண்டு சினிமா வரலாற்றில் அதிகப்படியான வசூல் என்கிறார்கள். இந்த வெற்றி டைரக்டர் தேஜா மூலமாக ராணாவுக்கு கிடைத்திருக்கிறது.