ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளான சம்பவத்திற்குப்பின் மலையாள நடிகைகள் உள்ளிட்ட சினிமாவில் மற்ற துறையில் இருக்கும் சில பெண்கள் அனைவரும் சேர்ந்து, தங்களது பாதுகாப்பிற்காக, பெண்கள் நல அமைப்பு என்கிற ஒன்றை துவங்கினார்கள்.. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்படிஎன்றால் நடிகர் சங்கம் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா என்கிற ரீதியில் சில நடிகைகள் மீது மலையாள நடிகர் சங்கம் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..
தற்போது திலீப் விவகாரம் சங்கத்திற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியரும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல நடந்துகொள்வதால் அவர் மீது நடிகர்சங்கம் மறைமுகமாக தடை விதித்துள்ளதாகவும் சொலப்பட்டது. அதன் காரணமாகவே மோகன்லாலுடன் அவர் அடுத்ததாக நடிக்க உள்ள 'ஒடியன்' என்கிற படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது..
இந்தநிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, மஞ்சு வாரியரின் நண்பரும், ஒடியன் பட இயக்குனருமான ஸ்ரீகுமார் மேனன், “மஞ்சு வாரியார் நீக்கப்படவில்லை.. அவர்தான் கதாநாயகியாக நடிக்கிறார்.. உங்களது சந்தேகமெல்லாம் தீர்ந்ததா..?” என பதில்கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.