ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடாவடி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் எம்எல்ஏ.,வாகவும் உள்ளார். 100 படங்களை தாண்டி இப்போது கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 102-வது படத்தில் நடித்து வருகிறார். பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தை அடுத்த நந்தியால் என்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதுதொடர்பான நிகழ்ச்சிக்கு பாலகிருஷ்ணா அங்கு சென்றிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க முயன்றார். இதில் கோபமான அவர், அந்த ரசிகரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் இணையதளங்களில் வைராகி வருகிறது.
ஏற்கனவே படப்பிடிப்பில் தனது உதவியாளரை ஷூவை கழற்ற சொல்லி அடித்தது, அதற்கும் முன்னர் ஒரு நிகழ்ச்சியில் ரசிகரை அறைந்தது என பாலகிருஷ்ணாவின் அடாவடி தொடர்ந்து வருகிறது.
நடிகராக மட்டுமல்லாது எம்.எல்.ஏ.,வாகவும் இருப்பதால் பாலகிருஷ்ணாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.