ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிவி சேனல்கள் தங்களது டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண பேட்டிகளில் கூட பிரச்சினைககளை உண்டு பண்ணி வருகிறார்கள். அந்தவகையில், சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் தனுஷ் விஐபி-2 படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவரை டென்சன் செய்வது போல் கேள்வி கேட்டதால் மைக்கை பிடுங்கி எரிந்து விட்டு வெளியேறினார் தனுஷ்.
அதேபோல் சமீபத்தில் நேனே ராஜூ நேனே மந்திரி படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் ராணாவும் டிவி 9 என்ற தெலுங்கு சேனலுக்காக பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளினி, ஆந்திராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை நடைபெற்று வந்த போதை பொருள் வழக்கு சம்பந்தமான விசாரணை குறித்து ராணாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். முக்கியமாக, அவருக்கும் அதில் தொடர்பு இருப்பதைப்போன்று கேள்வி கேட்க தொகுப்பாளினியிடம் தனது கோபத்தை கைகளை நீட்டியபடி வெளிப்படுத்தியிருக்கிறார் ராணா. அதையடுத்து அது சம்பந்தமான கேள்விகளை நிறுத்திக்கொண்டார்களாம்.
ஆனபோதும், பின்னர் அந்த பேட்டியை சேனலில் ஒளிபரப்பியபோது, ராணாவிடம் போதை பொருள் சம்பந்தமாக தொகுப்பாளினி கேள்வி கேட்பதையும், அதற்கு ராணா கடும் கோபத்தை வெளிப்படுத்தியதையும் அப்படியே காண்பித்திருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த ராணா, இந்த வீடியோ போலியாக தயார் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, ராணாவிடம் அந்த மாதிரி கேள்வி கேட்ட தொகுப்பாளினியை ராணாவின் ரசிகர்களும் எச்சரித்து வருகிறார்களாம்.