ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'தி கிரேட் பாதர்' படத்தை தொடர்ந்து தற்போது மம்முட்டி கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். வருகின்ற ஓணம் பண்டிகை முதல் அவை வரிசையாக வெளியாக இருக்கின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதில் மூன்று படங்கள் த்ரில்லர் வகையை சேர்ந்தவை என்பது தான். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ஷாம் தத் என்பவர் இயக்கியுள்ள 'ஸ்ட்ரீட் லைட்ஸ்' படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதில் மம்முட்டி துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அடுத்ததாக மம்முட்டியை வைத்து 'ராஜாதி ராஜா' படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகும் 'மாஸ்டர் பீஸ்' படம் கேம்பஸ் த்ரில்லராக உருவாக இருக்கிறது. இதில் படு ஸ்ட்ரிக்ட்டான எட்வின் லிவிங்ஸ்டன் என்கிற காலேஜ் புரபசராக நடிக்கிறார் மம்முட்டி. அடுத்ததாக சரத் சந்தித் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் 'பரோல்' என்கிற படத்தில் சிறைக்கைதியாக நடிக்கிறார் மம்முட்டி. இது பேமிலி த்ரில்லராக உருவாக இருக்கிறதாம். இதுதவிர 'தி செவன்த் டே' இயக்குனர் ஷ்யாம்தர் டைரக்சனில் மம்முட்டி நடித்து 'புள்ளிக்காரன் ஸ்டாரா' என்கிற படம் மட்டும் இவற்றில் இருந்து மாறுபட்டு ஜாலியான படமாக இருக்குமாம்.