ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'புக்ரி' படத்தை தொடர்ந்து தற்போதைக்கு நடிகர் ஜெயசூர்யா படம் எதுவும் வெளியாகும் சாத்தியம் தெரியவில்லை. ஆனால் தற்போது கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறார் ஜெயசூர்யா. அவற்றில் 'கேப்டன்' என்கிற படம் கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகிறது. இதில் கேப்டன் ஆக நடிக்கிறார் ஜெயசூர்யா. இந்தப்படத்தின் இயக்குகிறார் பிரஜேஷ் சென். இதுவரை ஜெயசூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இதுதானாம்.
மற்ற இரண்டு படங்களுக்கும் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை ஒளிந்துள்ளது. இவை இரண்டும் ஏற்கனவே ஜெயசூர்யா நடித்த படங்களின் இரண்டாம் பாகங்களாக உருவாகி இருக்கின்றன என்பதுதான் ஸ்பெஷல். 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படம் மீண்டும் இதே கூட்டணியில் உருவாகி வருகிறது.
அதேபோல 2015ல் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான படம் தான் 'ஆடு ; ஒரு பீகர ஜீவியானு'. மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கிய இந்தப்படம் வசூல், வரவேற்பு இரண்டிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆடு-2' என்கிற பெயரில் படமாக்கி வருகிறார்கள். இந்த மூன்று படங்களும் வரும் அக்டோபரில் இருந்து மாதத்திற்கு ஒரு படம் என ரிலீசாக இருக்கின்றன.