ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து சினிமாவில் உள்ள நடிகைகள் திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நல பாதுகாப்பு அமைப்பை துவங்கியுள்ளனர்.
இதன்மூலம் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவுசெய்துள்ளனர். இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். ஆனால் ஸ்வேதா மேனன், 'கள்ளபடம்' லட்சுமி ப்ரியா உள்ளிட்ட சிலர் இந்த அமைப்பு தேவையில்லை என கருத்து கூறியுள்ளனர்.
குறிப்பாக துணிச்சலான நடிப்பிற்கு மட்டுமல்லாமல், துணிச்சலான கருத்துக்களை சொல்லவும் தயங்காத ஸ்வேதா மேனன், “எனக்கு இந்த பெண்கள் நல அமைப்பின் உதவி தேவையில்லை.. என் பாதுகாப்பை நானே உறுதி செய்து கொள்வேன்.. தவிர எனக்கு எந்த சமயத்திலும் மலையாள நடிகர் சங்கம் (அம்மா) உறுதுணையாக இருக்கும்” என கூறியுள்ளார்.
அடுத்ததாக வரும் ஓணம் பண்டிகை தொடர்பாக டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என நடிகர் சங்கத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாமே என கேட்டால், “அந்த மாதிரி எந்த உத்தரவும் எனக்கு வரவில்லை” என பதில் கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்.