ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகர் என்.டி.பாலகிருஷ்ணாவின் 100வது படமான கவுதமி புத்ர சாதகர்ணி பெரும் வெற்றி பெற்றது. தற்போது பைசா வசூல் படத்தில் நடித்து வருகிறார். பாலகிருஷ்ணாவின் 102வது படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார்.
நயன்தாரா ஏற்கெனவே என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக சிம்ஹா மற்றும் ஸ்ரீராமராஜ்யம் படங்களில் நடித்தார். இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள். அந்த சென்ட்டிமென்ட் அடிப்படையில் தனது 100-வது படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பாலகிருஷ்ணா முயற்சித்தார். ஆனால் ஏனோ அவர் நடிக்க மறுத்துவிட்டடார். இதனால் அந்த கேரக்டரில் ஸ்ரேயா நடித்தார்.
இப்போது 102வது படத்தில மூன்றாவது முறையாக என்.டி.பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. கே.எஸ்.ரவிகுமார் நயன்தாராவிடம் கதை சொல்லி இம்பரஸ் பண்ணியதால் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க நயன்தாராவுக்கு 4 கோடி சம்பளம் என்கிறார்கள். படத்தை கவுதமிபுத்த சாதகர்ணி படத்தை தயாரித்த கல்யாண் தயாரிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.