ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை கடத்தல் விவகாரத்தை இந்த அளவுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி, பூதாகரமாக்கியத்தில் கேரள மீடியாக்களும் நிறைய பங்கு உண்டு.. ஆனால் மீடியாக்களின் இந்த அதிரடியை மலையாள நடிகர் சங்கம் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.. குறிப்பாக திலீப் பக்கம் தவறு இல்லாதது போல கருத்து கோரிய நடிகர்சங்க தலைவர் இன்னொசன்ட்டை அதிரடி கேள்விகளால் தடுமாற வைத்தன மீடியாக்கள்.. இதனால் நடிகர்சங்கத்தில் புதிய ஒரு முடிவை எடுத்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது..
அதாவது நடிகர்சங்கத்தை சேர்ந்த யாரும் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு டிவி சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ, பத்திரிகைகளில் சிறப்பு பேட்டி அழிக்கவோ கூடாது என்பதுதான் அந்த முடிவாம்.. ஆனால் நடிகர் பிருத்விராஜுக்கு சங்கத்தின் இந்த முடிவில் உடன்பாடு இல்லையாம்.. ஆரம்பத்தில் இருந்தே மீடியாக்கள் மீது தனி பாசம் வைத்துள்ள பிருத்விராஜ், இந்த முடிவை மீற தயாராகிவிட்டாராம். நடிகர்சங்கம் இப்படி ஒருவு முடிவெடுத்திருப்பது உண்மை என்றால் வரும் ஓணம் சீசனில் அனைத்து சேனல்களிலும் பிருத்விராஜின் நிகழ்ச்சிகளாக மட்டுமே பார்க்கமுடியும் என்றும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.. இனி அது என்ன புதிதாக குட்டையை குழப்ப போகிறதோ தெரியவில்லை.