ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள நடிகை மைதிலி. 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். பல படங்களில் பாடியுள்ளார். சால்ட் அண்ட் பெப்பர், மற்றும் ஈ அடுத்த கலத்து ஆகிய படங்களில் நடித்ததற்காகக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மைதிலி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா தயாரிப்பு நிர்வாகியான கிரண் குமார் என்பவரை காதலித்து வந்தார். பின்னர்தான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட விபரம் தெரிந்தது. இதனால் மைதிலி கிரண் குமாரை பிரிந்து விட்டார்.
இதனை கிரண்குமாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதிலியை பலவாறு டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். நீயும் நானும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளார். ஆனால் இதனை மைதிலி பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கிரண்குமார் மைதிலியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மைதிலி, கிரண்குமார் மீது எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கிரண்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.