வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
சமீபத்தில் ஐதராபாத்தில் போதை பொருள் தடுப்பு போலீசார் நடத்திய ரெய்டில் ஒரு குடும்பல் சிக்கியது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுக்கும், தெலுங்க சினிமாவைச் சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத் உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த விசாரணை இன்று முதல் தொடங்குகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளை விசாரணைக்காக ஒதுக்கியுள்ளனர்.
இதில், நடிகை முமைத்கானுக்கு ஜூலை 22-ந்தேதி விசாரணைக்காக ஒதுக்கியுள்ளனர். ஆனால், விசாரணைக்கு வர சொல்லி தனக்கு எந்த நோட்டீஸூம் வரவில்லை என முமைத்கான் கூறியிருந்தார். ஆகையால் இப்போது பிக்பாஸ் நடக்கும் வீட்டிற்கே சென்று முமைத்கானிற்கு நோட்டீஸ் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அப்படி அவர் நோட்டீஸை பெறும் பட்சத்தில் விசாரணைக்காக அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படும். ஆகையால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார் முமைத்கான். பிக்பாஸில் முமைத்கான் நீடிக்கிறாரா? இல்லை வெளியேறுகிறாரா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும்.