சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மலையாள நடிகர் திலீப் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்படுவதும் பின் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதையும் பார்க்கும்போது, எப்படி இருந்த மனிதன் இப்படி நிலைக்கு ஆளாகிட்டாரே என்கிற ஆதங்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.. ஆனால் போலீஸ் வட்டாரத்திலோ திலீப் சில போலீசாரிடம் எதார்த்தமாக பேசிக்கொண்டு, அவ்வப்போது ஒன்லைன் காமெடி பஞ்ச்'களை கூறி சிரிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,..
குறிப்பாக அவரது அரெஸ்ட் பற்றி சிறையில் இருந்த போலீஸாரில் சிலர் வருத்தத்துடன் அவரிடம் விசாரித்தார்களாம். ஆனால் அவரோ தனது படங்களில் பேசுவது போலவே, “நான் ஆண்டவனிடம் எனக்கு பத்துநாள் ரெஸ்ட் கொடு என கேட்டேன்.. அது அவர் காதில் அரெஸ்ட் என விழுந்து விட்டது போல.. அதனால் பத்துநாள் அரெஸ்ட் தந்துவிட்டார்” என சிரித்துக்கொண்டே கூறினாராம்.