ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நிறைய பேர் சொல்வதைப்போல ரொம்ப தாமதம் எல்லாம் ஒன்றுமில்லை, மிகச்சரியான வயதில் தான் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார் மோகன்லாலின் மகன் பிரணவ். இவர் நடிக்கும் முதல் படத்தின் பூஜை நேற்று காலை நடைபெற்றது. படத்திற்கு 'ஆதி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
'த்ரிஷ்யம்' புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். வாரிசு நடிகர்களில் துல்கர் சல்மான் தனது 25வயதில் கதாநாயகன் ஆனார். பஹத் பாசில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்றாலும் அவரது 26வது வயதில் தான் நடிகராக மாறினார். இப்போது ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் பிரணவுக்கு வயது 26 தான்.
ஆனாலும் கடந்த நான்கு வருடங்களாக இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக சேர்ந்து டைரக்சன் தொழில் கற்றுக்கொண்டு வந்தார். தந்தை மோகன்லாலின் விருப்பத்திற்கு ஏற்பவே தற்போது நடிகராக மாறியுள்ளார். இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாக இருப்பதால் இதற்காக முறைப்படி, நடனம், சண்டை, பார்க்கோர் விளையாட்டு பயிற்சி என சகல வித்தைகளையும் கற்றுக்கொண்டுதான் நடிகராக களம் இறங்கியுள்ளார் பிரணவ்.
பிரணவுக்கு இன்னொரு வாரிசு நடிகரும் அவரது நண்பருமான துல்கர் சல்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “வாழ்க்கையில் ரொம்பவே ஸ்பெஷலான, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் எனது அன்பிற்குரிய அப்பு(பிரணவ்)க்கு எனது வாழ்த்துக்கள்.. எனக்கு தெரியும் இந்தப்படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக அவர் எவ்வளவு பயிற்ச்சி எடுத்திருக்கிறார் என்று. நிச்சயம் இந்தப்படம் ஒவ்வொருவருக்கும் உண்மையிலேயே ட்ரீட்டாக இருக்கும். நீ கலக்கத்தான் போகிறாய்.. நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்” என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் துல்கர் சல்மான்.