ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது தான் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம். நடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் இவர்களது நண்பரான ஷாஜி நடேசன் ஆகியோர் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள். இதில் ஆர்யா இந்த நிறுவனம் ஆரம்பித்தபின் தானும் ஒரு பங்குதாரராக சேர்ந்துகொண்டவர். உறுமி படம் தான் இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. கடைசியாக சில மாதங்களுக்கு முன் வெளியான மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்தது
இந்தநிலையில் இதன் பங்குதாரர்களில் முக்கியமானவராக கருதப்படும் பிருத்விராஜ் இந்த நிறுவனத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார். இதற்காக பங்குதாரர்களுக்குள் எந்த மனக்கசப்பும் உருவாகிவிட்டதோ என நினைத்துவிட வேண்டாம்.
இதுபற்றி பிருத்விராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த ஆறு வருடங்களில் இந்த நிறுவனத்தில் நானும் ஒரு பாகமாக இருந்ததில், பெருமைப்படும் படங்களை கொடுத்ததில் மகிழ்ச்சி. தற்போது புதிய இலக்கை நோக்கி நான் நகரவேண்டிய சரியான தருணம் இதுதான் என நினைக்கிறேன்.. அதனால் இந்த நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்.. அதேசமயம் இந்த நிறுவனத்தின் நலம் விரும்பியாக எப்போதும் இருப்பேன்.. ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் ஆகியோர் இந்த நிறுவனத்தை இதேபோல தொடர்ந்து சிறப்பாக வழிநடத்த எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார் பிருத்விராஜ்.