ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து திரும்பி வரும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாவனாவின் காரை மறித்து, கடத்திச்சென்று சுமார் இரண்டு மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் முதன்மை குற்றவாளி தான் பல்சர் சுனில் என்பவன். போலீசாரால் தேடப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டபோது தான், தான் இந்த குற்றத்தை செய்தேன் என ஒப்புக்கொண்டும் விட்டான். தற்போது சிறையில் உள்ள இவன் மலையாள நடிகர் திலீப்பிற்கு ஒரு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்னதான் இருந்ததாம் அந்த கடிதத்தில்..? திலீப் தனது விஷயத்தில் சீக்கிரம் ஒரு நல்ல முடிவை சொல்லவேண்டும் என்றும், மக்கள் இந்த கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் மறைந்துள்ளவர்கள் யார் என தன்னை கேட்டு நெருக்கடி பண்ணுவதாகவும் அதில் கூறியுள்ளானாம்.சம்பந்தப்பட்ட நடிகையே தன்னை மன்னிக்க தயாராக இருக்கும் சூழலில் நான் இன்னும் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் எனவே பேசியபடி தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து செட்டில் செய்யுமாறும் அதில் கூறியுள்ளானாம்.
ஏற்கனவே பாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருக்கிறது என கூறப்பட்டு அதை அவர் மறுத்துவந்த நிலையில் பல்சர் சுனி(ல்) இவ்வாறு கடிதம் எழுதியதாக கூறப்படுவது திலீப்பை அதிர்ச்சியாக்கி உள்ளது. இதனால் தனது பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பல்சர் சுனி(ல்) செயல்படுவதாகவும் அதன் தொடர்ச்சியாக ஒன்றரை கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இதுகுறித்து போலீஸார் தீர விசாரிக்கவேண்டும் என்றும் போலீஸில் புகார் செய்துள்ளாராம் திலீப்.