சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்களின் வாரிசுகள் திரையுலகில் நுழைவதும் அதில் சிலர் வெற்றிபெற்று தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்ததும், அப்படியே திருமண வாழ்க்கையிலும் அடியெடுத்து வைப்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் மலையாள சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் இளம் நடிகர் துல்கர் சல்மான், சினிமாவில் நுழைவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டவர். அதற்கு காரணம் அவரது தந்தை மம்முட்டியின் நிபந்தனை தான்.
மம்முட்டி, தான் சினிமாவில் நுழைவதற்கு முன்பே கல்லூரி படிப்பை முடித்து திருமணமும் செய்து கொண்டபின் தான் சினிமாவில் நுழைந்தாராம்.. காரணம் திருமணம் செய்து கொண்டபின் சினிமாவில் நுழைவது தான் சினிமாவை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வைக்கமால் சீரியஸாக பார்க்க சொல்லும் என்பது மம்முட்டியின் எண்ணம். தேவையற்ற சில குழப்பங்களை தவிர்க்க திருமணம் ஒரு சிறந்த கடிவாளம் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை.
அதனால் துல்கர் சல்மான் தானும் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று சொன்னதுமே அவர் திருமணம் செய்து கொண்டு பின்னர்தான் நடிக்க செல்லவேண்டும் என்கிற நிபந்தனையை முன்வைத்தாராம் மம்முட்டி. துல்கரும் அதன்படியே திருமணம் செய்துகொண்டு அதன்பின் ஒரு வருடம் கழித்து தான் திரையுலகில் கால் வைத்தாராம். இன்று துல்கர் சல்மான் தேர்ந்தெடுக்கும் படங்களிலும் அவரது நடிப்பிலும் ஒரு நேர்த்தி இருப்பதற்கு காரணமும் அவரது திருமண வாழ்கை தான் என்கிறார்கள் மம்முட்டியையும் துல்கரையும் நன்கு அறிந்தவர்கள்.