ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா படங்களில் நடித்தவர் மேக்னா. தற்போது அவர் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து வரும் கன்னடப்படம் ஜிந்தா. இதனை மகேஷ் இயக்குகிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் மேக்னா ராஜ் ஆண்களை கடுமையாக விமர்சித்து பேசும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு ரசிகர்கள் இணையதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கன்னட அமைப்பினர் பெங்களூருவில் உள்ள மேக்னா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும். மேக்னா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோஷம் எழுப்பினர். வீட்டுக்கு வெளியே வந்த மேக்னா "ஆண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அந்த வசனம் வைக்கப்படவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் வைக்கப்பட்டது. முழுபடத்தையும் பார்த்தால் அது உங்களுக்கு புரியும். படம் வெளிவரும் வரை காத்திருங்கள் அதன் பிறகு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்" என்றார். பின்னர் போலீசார் வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.