ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தவர் அவந்திகா ஷெட்டி, மங்களூரைச் சேர்ந்த இவர் ரங்கி தாரங்கா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கல்பனா 2 படத்தில் நடித்தார். தற்போது ராஜா ராதா படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஜு கன்னடா மீடியம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
25 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ், அவந்திகாவை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தார். இதையடுத்து அவந்திகா, தயாரிப்பாளர் சுரேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னட சினிமா வர்த்தக சபையில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக்கில் அவந்திகா கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை கண்டித்தேன். அத்து மீறி நடக்க முயன்றார். கோபத்தை காட்டினேன். அதனால் என்னை படத்திலிருந்து நீக்கி விட்டார். என்று தெரிவித்துள்ளர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை தயாரிப்பாளர் சுரேஷ் மறுத்துள்ளார். "அவந்திகாக படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. எல்லோரிடமும் ஏதாவது ஒரு காரணத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவரை நீக்கினேன்" என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்.