ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்சினிமாவிற்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவும் கலாச்சார காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலரால் அவ்வப்போது எதிர்ப்பையும் பட ரிலீசில் சிக்கல்களையும் சந்தித்துத்தான் வருகின்றது. அதில் லேட்டஸ்ட்டாக எதிர்ப்புக்கு ஆளாகி இருபது, இன்னும் ஆரம்பிக்கவே படாத, தற்போது 'மகாபாரதம்' என டைட்டில் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள மோகன்லாலின் ஆயிரம் கோடி பட்ஜெட்தான 'மகாபாரதம்' படம் தான். 'கேரள ஹிந்து ஐக்கிய வேதி' என்கிற அமைப்பின் தலைவரான கே.பி.சசிகலா என்பவர் தான் இதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பவர்.
எதற்காக மோகன்லால் படத்தை எதிர்க்கிறார் என்றால்,, மகாபாரதம் என்கிற டைட்டிலை இந்தப்படத்துக்கு வைக்க கூடாதாம்.. காரணம் இந்தப்படத்திற்கான கதையாக எழுதப்பட்ட 'ரண்டமூழம்' நாவலே, மகாபாரதத்தில் இல்லாத சில நிகழ்வுகளை இட்டுக்கட்டி, பீமனின் கேரக்டரை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது.. அப்புறம் எப்படி இதற்கு மகாபாரதம் என டைட்டில் வைத்தார்கள்.. அதை உடனே மாற்றவேண்டும்.. அப்படி இந்தப்படம் தயாராகி, 'மகாபாரதம்' டைட்டிலுடன் வெளியானால் அந்தப்படத்தை தியேட்டர்களில் திரையிட விடமாட்டோம் என எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளார் இந்த சசிகலா.